Saturday 24 December 2016

நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்.......!?

காங்கிரஸ் பொது செயலாளர் திரு. ராகுல் காந்தி,  பிரதமர் திரு. மோடி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றசாட்டுகளை ஆதாரங்களுடன் கூறியதை நாம் அறிந்து இருக்கிறோம்.  அந்த குற்றசாட்டுகளுக்கு இன்று வரை பதில் தரப்படவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் சொன்ன வார்த்தை தான் " நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்..."

உண்மையிலே கங்கா நதி மிகவும் தூய்மையானதா.....? என்றால் அது மிக பெரும் ஒரு வேதனையை தான் கொடுக்கிறது...

இமையமலை சாரலில் பனிக்கட்டிகள் உருகி , தண்ணீர் ஓடிவரும் போது , வெள்ளி கோடுகள் இழைத்தது போல தூய்மையை கண்டு மெய் சிலிர்த்து போய் நின்று இருக்கிறேன்...பெரும்பாலும் எல்லா நதிகளும் உற்பத்தியாகி வருகிற இடத்தில் சுத்தமாக இருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம்.....

ஆனால் அதே நதி இந்திய திரு கண்டத்தில் ஓடி வருகிற அவலம் இன்று கொடூரமானது.  மிகப் பெரிய அசுத்தமான நதிகளில் ஓன்று இந்த கங்கை நதியாக இருப்பதை கவனிக்கும் போது , நெஞ்சம் வலிக்கிறது.... மனித கழிவுகள் , மனித உடல்கள் , மற்றும் குப்பைகள் எல்லாம் சேர்ந்து இந்த கங்கையை அசுத்தமாக மாற்றி விட்டது...



இந்த அசுத்த கங்கையை சுத்தமாக்க பல முயற்சிகள் பல காலகட்டங்களில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகிறது.  ஆனாலும் இன்னும் சுத்தமானது போல தெரியவில்லை....

ஜனவரி 14 , 1986 ம் ஆண்டில் முன்னாள் பாரத பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி , இந்த கங்கையை சுத்திகரிக்கும் திட்டத்தை கையில் எடுத்தார். எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று இல்லாமல் , நீண்ட நெடிய தொலைநோக்கு பார்வையுடன் கங்கையில் கலக்கும் கழிவுகளை ( வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் ) அகற்ற பல புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார்.  Ganga Action Plan என்ற பெயரில் பல காரியங்கள் நிறைவேற்றப்பட்டது.  

1985 ம் வருடம் முதல் 2௦௦௦ வருடம் வரை கிட்டத்தட்ட 1௦ பில்லியன் ரூபாய்கள் இந்த தூய்மை திட்டத்திற்காக செலவிடப்பட்டது. 

2௦ பெப்ரவரி 2௦௦9 ம் ஆண்டில் இந்திய பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களால் National River Ganga Basin Authority (NRGBA )   என்ற அமைப்பை தொடங்கி இந்திய தேசியத்தின் நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது.  2௦11 ம் வருடத்தில் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் முயற்சியினால் கங்கையை சுத்தப்படுத்த உலக வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டாலர் அளவில் உதவி பெறும் ஒப்புதல் பெறப்பட்டது.

1௦ ஜூலை 2௦14 ம் வருடத்தில் கங்கையை சுத்தபடுத்த நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி 2௦37 கோடியை தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.  அடுத்த 5 வருடங்களில் இன்னும் 2௦௦௦௦ கோடி கங்கையை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது....

இந்திய தேசியத்தின் நதியான கங்கை வெகு விரைவில் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.  ஆனால் இவ்வளவு அழுக்கு நிறைந்த கங்கையை பிரதமரோடு ஒப்பிட்டு மத்திய அமைச்சர் பேசியது மாத்திரம் எனக்கு விளங்கவில்லை......

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி