Wednesday 30 November 2016

கருப்பு பண மீட்பு என்ற பெயரில் ஒரு விளையாட்டு

"பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடுதல்" என்ற மொழியை அறியாத தமிழர்கள் யாருமே இருக்கமாட்டார்கள் என்பது எனது திடமான எண்ணம்..! நல்லா தூங்கிகிட்டு இருந்த பிள்ளையை வேண்டும் என்றே கிள்ளி விட்டு , அது அழ ஆரம்பித்தவுடன் தொட்டிலை ஆட்டி பெயர் வாங்குவது தான் அந்த மொழியின் அர்த்தம்....!

இந்த மொழிக்கும் , கருப்பு பண மீட்புக்கும் என்ன தொடர்பு என்று ஒரு கேள்வி எழும்பத்தான் செய்கிறது...சற்று சிந்திப்போமே....!

கருப்பு பணம் என்றால் என்ன என்பதை நாம் முந்தைய பதிவுகளில் சிந்தித்து இருக்கிறோம்.  கணக்கில் காட்டாத பணம் மக்கள் மத்தியில் புழங்கி கொண்டு இருக்கிறது. அதை கண்டுபிடிக்க தான் இந்த போராட்டம் எனவே நாம் ரத்தம் சிந்தவும் ( இராணுவ வீரர்களை போல ) என்று ஒரு கூட்டம் பிரசாரம் செய்கிறது. ஆனால் சில உண்மைகள் என்னை வேதனைப்படுத்துகிறது....!

உலகையே பொருளாதார சீரழிவு தாக்கினபோதும் கூட, இந்தியா தாக்குபிடித்த காரணம் , முந்தைய அரசில் இருந்த சில பொருளாதார நடவடிக்கைகள் என்பதை யாரும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. ஆனால் கருப்பு பண மீட்பு என்ற போர்வையில் இப்போது செய்யப்படும் இந்த திட்டம் மாபெரும் பொருளாதார சீரழிவுக்கு நேராக மக்களை கொண்டுபோவதை அநேகர் புரிந்து கொள்ளமுடியவில்லை.  சரி....நாம் கட்டுரைக்கு வருவோம்.....

முந்தைய அரசின் காலத்தில் ( அதாவது மார்ச் 2014ல் ) பண புழக்கம் , வங்கிகளின் பண இருப்பு மற்றும் பொதுமக்களிடம் இருக்கும் பணம் மற்றும் தற்போதைய அதே காரணிகளை ( ஜூலை 2௦16 ல் ) ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து ஆராய்ந்து பார்த்தால் , ஒரு ஆச்சரியம் மிஞ்சுகிறது....




Year Month
Currency In Circulation
(பில்லியன் )
வங்கி இருப்பு (பில்லியன் )
Currency With Public (பில்லியன் )
மார்ச் 2014
13010.74
552.55
12458.19
மார்ச் 2௦15
14483.12
621.31
13861.82
மார்ச் 2௦16
16634.63
662.09
15972.54
ஜூலை 2௦16
17361.77
750.34
16611.43


மேலே குறிப்பிட்ட அட்டவணையில் இருந்து பார்த்தால் 2 வருட காலத்திற்குள் 4,351.03 பில்லியன் அளவிற்கு பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது. மாத்திரம் அல்ல மக்களிடம் உள்ள பணம் என்று கணக்கிடப்பட்டதில் 4153.24 பில்லியன் அதிகரித்து உள்ளது.  1 பில்லியன் என்பது 1௦௦௦ மில்லியன் ( 1 மில்லியன் என்பது 1௦ லட்சம் ). அதாவது 4153,24,00,00,000 ரூபாய் . அதாவது 41.53 லட்சம் கோடி அதிகமாக இந்த வருடத்தில்  புழக்கத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது .

சரி போகட்டும்...! 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது அல்லவா...! ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கைவசம் இருந்த 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளின் மதிப்பும் ரிசர்வ் வங்கி தளத்தில் இருந்து பெறப்பட்டது....

மாதம் / வருடம்
5௦௦ ரூபாய்
( பில்லியன் )
1௦௦௦ ரூபாய்
( பில்லியன் )
மார்ச் 2014
5702.48
5081.37
மார்ச் 2௦15
6563.91
5612.45
மார்ச் 2௦16
7853.75
6325.68
மார்ச் 2௦14 ல் இருந்து மார்ச் 2௦16 வரை அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் புழக்கத்திற்கு விடப்பட்ட 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் மதிப்பு
அதிகம்
2151.27 பில்லியன்
1244.31 பில்லியன்


இந்த 2 வருடத்தில் அதிகமாக 2151270000000 ( 21.57 லட்சம் கோடி 5௦௦ ரூபாயிலும் ) 1244310000000 ( 12.44 லட்சம் கோடி 1௦௦௦ ரூபாயிலும் ) ஆக மொத்தம் 34.01லட்சம் கோடி புதிதாக சந்தைக்குள் இந்த 2 வருடத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பல மாதங்களாக திட்டமிடப்பட்டு தான் 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் திரும்பபெறப்படுகிறது என்று கூறபட்டாலும் , கீழ்க்கண்ட கேள்விகள் மனதில் எழும்ப தான் செய்கிறது...

1.       இப்படி ஒரு திட்டம் இருந்தால் , அதிக அளவில் 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் இந்த இரண்டு வருடத்தில் புழக்கத்தில் விடப்பட்டதின் காரணம் என்ன...?

2.       கடந்த 2 வருடங்களாக பணபுழக்கத்தை படிப்படியாக குறைத்து இருந்தால் , மீதம் உள்ள 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய்களை மாற்றுவது எளிதாக இருக்குமே...?

3.       கடந்த இரண்டு வருடத்தில் பணம் அச்சிட செலவழிக்கப்பட்ட தொகை மீந்திருக்குமே...?

4.       நீங்களே பணப்புழக்கத்தை அதிகமாக்கி , நீங்களே திரும்ப வாங்கி , அது தான் கருப்பு பணம் என்று நம்ப வைப்பதின் இரகசியம் என்ன...?


மொத்தத்தில் ஓன்று தான் தோன்றுகிறது....." பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிட்ட கதை தான் " இது....

Monday 28 November 2016

டிஜிட்டல் இந்தியாவின் ஆதாரம் ஆதார் - காரணம் யார்....?

இப்போது எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் என்ற வார்த்தைகள் பரவலாக பேசப்படுவதை நாம் கேட்கமுடியும். நமது நாடு கூட டிஜிட்டல் இந்தியா என்று முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறதை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில் டிஜிட்டல் இந்தியா என்றால் என்ன...? இதற்கான விதை விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது எவ்வாறு என்பதை நாம் சிந்திப்போம்.

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் பதிவேடுகளுக்கு பஞ்சமே இல்லை...இலட்சக்கணக்கான பதிவேடுகள் ஒவ்வொரு அலுவலகத்திலேயும் பராமரிக்கப்படுகிறது. மாத்திரமல்ல 125 கோடி மக்களின் அநேக விவரங்கள் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை , சொத்து விவரங்கள் , வங்கி கணக்குகள் இன்னும் ஏராளம் ) தனி தனி கணக்குகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.  இதனால் ஏற்ப்பட்ட குளறுபடிகள் ஒருபக்கம் இருக்க , ஏராளமான போலி விவரங்கள் உருவாக்கப்பட்டன.  இதையெல்லாம் தடுக்க மாபெரும் பொருளாதார மேதை மாண்புமிகு முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் ஒரு அற்புதமான திட்டம் தீட்டப்பட்டது.... ( கார்கில் யுத்தம் முடிந்தவுடன் எல்லையில் யாரும் நுழையாமல் இருக்க ஒரு தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கவேண்டும் என்ற திட்டமே முன்னால் இருந்தது ) அந்த திட்டமே ஆதார் என்று அழைக்கப்பட கூடிய தனிமனிதனின் அடையாள அட்டை என்பது....

இது ஒரு மாபெரும் தொலைநோக்கு திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து இதுவரை அருமையாக செயல்படுவதில் இருந்தே இந்த திட்டம் எவ்வளவு தீவிரமாக அதேநேரத்தில் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஓன்று என்று நாம் அறிந்து கொள்ளலாம் . 

2௦௦6 ம் வருடத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டு துறைரீதியான அனுமதி ௦3 மார்ச் 2௦௦6 அன்று வழங்கப்பட்டது. அதே நாளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.  இந்த திட்டத்தை கணினியில் செயலபடுத்த வேண்டியதாகையால் விப்ரோ நிறுவனத்தின் திட்ட செயல்பாடு பெறப்பட்டு 3௦ ஆகஸ்ட் 2௦௦7 ல் திட்ட கமிஷனால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த சமயத்தில் தான் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது , தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் எடுத்தார்கள்.

இந்த திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவதற்காக பல துறை அமைச்சர்கள் அடங்கிய குழு ஓன்று அமைக்கப்பட்டது. ௦2 ஜூலை 2௦௦9 ம் ஆண்டில் UIDAI யின் தலைவராக நந்தன் நீல்கேணி நியமிக்கப்பட்டார். இவர் இன்போசிஸ் என்ற பிரபல கணினி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....

செப்டம்பர் 2௦1௦ ல் முதல் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்ட போதே அநேக போலி அடையாளங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் மிகுந்த ஆச்சரியத்துக்கு உரியது. எந்த பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுவே செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கி 2 வருடத்தில் 21 கோடி ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 21 வது கோடி அடையாள அட்டையை ராஜஸ்தானில் உள்ள dudu என்ற இடத்தில் வழங்கும்போது மாண்புமிகு முன்னாள் பிரதமர் பேசிய வார்த்தைகளை நான் சொல்லாமல் போகமுடியாது.... "I would like to compliment UIDAI Chairman Shri Nandan Nilekani and his team for achieving so much in such a short duration" (இத்தனை குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்திய திரு.நந்தன் நீல்கேணி மற்றும் அவரது குழுவினர் தான் பாராட்டுக்கு உரியவர் ) என்று பாராட்டிய தன்னடக்கத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை...

தொடர்ந்து ஆதார் அட்டைக்கு பின்பு ஒளிந்து இருந்த பல பெரிய திட்டங்கள் அடங்கி இருந்ததை அறிந்த போது , எவ்வளவு திட்டமிடப்பட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று அறிந்து கொள்ளமுடிந்தது...

1.       ஆதார் அடையாள அட்டை என் வங்கி புத்தகத்துடன் இணைக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

2.       LPG காஸ் வாங்கும் போது அரசு கொடுக்கும் மானியம் வங்கி மூலமாக நேரடியாக மக்களுக்கு வழங்கும் திட்டம் 26.11.2௦12 ல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பெருமளவில் கருப்புப்பணம் உருவாவது தடுக்கப்பட்டது.

இந்த திட்டம் ஆரம்பித்த போது பாஜக வின் தேசிய செய்தி தொடர்பாளர் திருமதி மீனாக்ஷி லேகி , பாஜக பொது செயலாளர் திரு ஆனந்த் குமார் , திரு சுப்பிரமணியசாமி போன்றவர்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டது. 1௦ ஜூன் 2௦14 ல் ஆதார் செயல்பாட்டை கவனித்து கொண்டு இருந்த அமைச்சக குழுவை மாண்புமிகு தற்போதைய பிரதமர் கலைத்தார்கள். இருந்தாலும் இந்த திட்டத்தின் அடித்தளத்தை 1 ஜூலை 2014 ல் திரு .நந்தன் பிரதமரிடம் கீழ்க்கண்டவாறு விவரமாக விளக்கி கூறினார்...

1.       பாஸ்போர்ட் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்...
1.       சிம் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்.
2.       PF கணக்குடன் ஆதார் இணைக்கப்படும்.
3.       திருமண தகவல் மையங்களில் ஆதார் இணைக்கப்படும்.
4.       வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும்.
5.       ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்படும்
6.       மக்கள் தொகை பதிவேட்டுடன் ஆதார் இணைக்கப்படும்... என்று பல ....

இந்த திட்டத்தில் ஒளிந்திருக்கும் தொலைநோக்கு பார்வையை உணர்ந்த பிரதமர் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று 5 ஜூலை 2௦14 ல் அறிவித்தார். இன்றைக்கு கிட்டத்தட்ட 1௦3 கோடி ஆதார் அட்டைகள் வழங்கபட்டு இருப்பதாக UIDAI அறிவிக்கிறது..

டிஜிட்டல் இந்தியாவை குறித்து நாம் பேசுகிற போது அதை உருவாக்க கனவு கண்டு அதை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த மாண்புமிகு முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்களை நினைவுகூறாமல் இருக்கமுடியாது.....


டிஜிட்டல் இந்தியாவின் ஆதாரம் ஆதார் என்றால் ஆதாரின் ஆதாரம் எவர் என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்...!

Sunday 27 November 2016

2G - 1,76,000 கோடி - ஊழலா / நஷ்டமா - ஒரு அலசல்

ஊழல் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது 2G தான். அதுவும் 1,76,௦௦௦ கோடி ரூபாய் ஊழல் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. இன்றும் 1,76,௦௦௦ கோடி ரூபாயை பணமாக வைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று வாதிடுபவரும் உண்டு....உண்மையில் 1,76,௦௦௦ கோடி ரூபாயை ஊழல் செய்து விட்டார்களா...? உலகின் முதல் பணக்காரர் பில்கேட்சின் சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலர் , அதாவது 4.25 லட்ச கோடி. அதேநேரத்தில் உலகின் 1௦௦ வது பணக்காரரின் மதிப்பு 10.2 பில்லியன் டாலர் , அதாவது கிட்டத்தட்ட 5,3௦௦ கோடி. எனவே 1,76,௦௦௦ கோடி பணத்தை யாராவது கையில் வைத்திருந்தால் , அவர் நிச்சயம் உலக அளவில் ஒரு 3௦ வது இடத்தையாவது பிடிக்க வாய்ப்புண்டு.... சரி...2G என்றால் என்ன...?

இரண்டாம் தலைமுறை தொலைபேசி / அலைபேசி களுக்கான அலைவரிசையே 2G ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்பட்டது.. 1997 ம் வருடம் மற்றும் 2௦௦௦ வருடங்களில் அலைவரிசைகள் ( 9௦௦ MHz) MTNL மற்றும் BSNL க்கு வழங்கப்பட்டது....2௦௦1 ம் வருடத்தில் முதல்முறையாக 1800 MHz அலைக்கற்றைகள் ஏலமுறையில் விடப்பட்டன....இந்த காலத்தில் தான் தமிழ்நாட்டில் முதல்முறையாக BPL அலைபேசி தன் சேவையை துவங்கியது. வாக்கி டாக்கி போல பெரிய செல்போன்களை கையில் வைத்திருப்பதே கவுரவம் என்று கருதிய காலம் அது.  அது ஒருவகையில் உண்மைதான்....ஏன் எனில் BPL அலைபேசி வகுத்திருந்த சேவைக்கட்டணம் அவ்வளவு அதிகம். ஒன்றுமில்லை அவுட்கோயிங் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 16ம் , இன்கம்மிங் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 4ம் வசூலிக்கப்பட்டது. இப்படி கட்டணம் இருந்தால் நம்மில் ஒருவர் கூட அலைபேசியை பயன்படுத்த மாட்டோம் என்பதை அரசு அறிந்தது.... அதே நேரத்தில் இந்தியாவின் அபரீதமான கணிணியல் வளர்ச்சிக்கும் அதிகவேக இன்டர்நெட் போன்றவை தேவைப்பட்டன...இக்காலத்தில் தான் நாட்டை கணினிமயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டது என்று தான் கூறமுடியும்....

சாமானிய மக்களும் அலைபேசியை / இணையத்தை பயன்படுத்தவேண்டும் , அதே நேரத்தில் அந்த சூழல் சீக்கிரமாக இந்தியாவில் உருவாகவேண்டும் என்று நினைத்த அரசு 2௦௦8 ல் 122 2G அலைகற்றைகளை 2௦௦1 விலையிலே கொடுக்கக் தீர்மானித்தது...ஏலத்தில் விடாமல் 2௦௦1 விலையிலே கொடுப்பதற்கு அரசு நினைத்த பிரதான காரணம் வளர்ச்சியே....! ஒருவேளை 2௦௦8 ல் ஏலம் விடப்பட்டு இருந்தால் பல ஆயிர கோடிக்கு ஏலம் போயிருக்கும். ஆனால் பல ஆயிர கோடிக்கு ஏலம் எடுக்கிறவன் தனது சேவையை எப்படி குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கமுடியும் என்ற நினைப்பு தான் அந்த முடிவுக்கு காரணம். எனவே First Come First Serve முறையில் அலைகற்றைகளை ஒதுக்க அரசு தீர்மானித்தது..

இங்கு தான் தமிழ்நாட்டின் சிங்கம் (!) ராஜா தனது வேலையை காண்பித்தார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியில்லாத / அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்தார். வெளிப்படையான முறையில் ஒதுக்கீடு செய்யும் படி பிரதமர் கூறிய அறிவுரையை புறம் தள்ளியதால் இந்த முறைகேடான ஒதுக்கீடு நடந்தது....ஆனால் இந்த காலங்களில் தான் 1 நிமிடத்திற்கு 16ரூபாய் ஏற்று இருந்த அவுட்கோயிங் கால் 1 ரூபாய் அளவுக்கு வந்ததை நாம் அறிந்திருக்கிறோம்....! இந்த காலகட்டத்திற்கு பின்பு தான் இந்திய தொலைபேசி வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்பட்டதை யாரும் மறுக்கமுடியாது.   சரி ...! இப்போது 1,76,௦௦௦ கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து சிந்திப்போம்...!

அரசின் திட்டங்களை ஆய்வுசெய்யும் CAG என்று சொல்லப்பட கூடிய மத்திய தணிக்கை துறை இந்த 2G ஒதுக்கீடு குறித்தும் ஆய்வு செய்தது. 2௦௦8 ல் First Come First Serve முறையில் ஒதுக்கீடு செய்யாமல் ஏலம் மூலம் அலைகற்றைகளை விற்று இருந்தால் அரசுக்கு லாபம் கிடைத்து இருக்கும் என்று தந்து அறிக்கையை சமர்ப்பித்தது. 2௦1௦ ம் வருடம் விடப்பட்ட 3G அலைகற்றை ஏலத்தை அடிப்படையாக கொண்டு 2௦௦8 ல் 2G அலைகற்றைகள் ஏலம் விடபட்டு இருந்தால் 1,76,௦௦௦ கோடி அரசுக்கு கூடுதல் பணம் கிடைத்து இருக்கும் என்று அறிவித்தது.... அதாவது அரசுக்கு 1,76,௦௦௦ கோடி இழப்பு என்று அறிவித்தது....

சரி ....இவைகளை கருத்தில் கொண்டு நாம் பின்வரும் காரியங்களை சிந்திப்போம்....!

1.       ஏலம் விட்டு இருந்தால் 1,76,௦௦௦ கோடி கிடைத்து இருக்கலாம். ஆனால் 1,76,௦௦௦ கோடிக்கு ஏலம் வாங்கிய தொலைபேசி நிறுவனங்கள் மக்களிடம் தானே அந்த பணத்தை திரும்ப வாங்கும். அப்படியானால் சாமானிய மக்களுக்கு எப்படி அலைபேசி போய் சேரும்...?  இது ஒருவகையில் இலவச மின்சாரம் கொடுப்பது போலதான்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது அரசுக்கு இழப்பு தானே..! ஆகிலும் நமது நாட்டில் விவசாயம் வளரவேண்டும் என்ற எண்ணத்தில் இலவச மின்சாரம் கொடுக்கபடுகிறது....

2.       அப்படியானால் இதிலே ஊழல் இல்லையா...என்று கேட்டால் கண்டிப்பாக இருந்து இருக்கும்...சாவு சான்றிதழ் வாங்குவதற்க்கே பணம் வாங்குகிற இந்த நாட்டிலே , சும்மா ஒதுக்கீடு செய்து இருப்பார்களா...? கண்டிப்பாக வாங்கியிருப்பார்...ஆனாலும் இவ்வளவு தான் லஞ்சம் வாங்கினார்கள் என்று யாராலும் நிரூபிக்கமுடியவில்லை....! நான் நினைக்கிறேன் அதிகபட்சம் 5௦௦ கோடிகள் ....இருக்கலாம்....

3.       திரு.ராஜாவுக்கு நான் வக்காலத்து வாங்குகிறேனா...? இல்லை...ஊழல் செய்தது யாராய் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் தண்டனை வாங்கி கொடுங்கள்.....! எனவே தான் கருப்பு பணம் யாரிடம் இருக்கிறதோ , அவர்களை மடக்குங்கள் என்கிறேன்...


4.   1,76,௦௦௦ கோடி என்பது ஊழல் அல்ல அது இழப்பு...! அது மக்கள் மத்தியில் 1,76,௦௦௦ கோடி ஊழல் என்று பரப்பியது ஒரு அரசியல் தந்திரமே....!

Friday 25 November 2016

கருப்பு பண மரணங்கள் - மௌனமே அஞ்சலி

5௦௦ / 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்தியா முழுவதும் நிகழ்ந்த பரிதாப மரணங்கள் உங்கள் மௌன அஞ்சலிக்காக....!

1.       டெல்லி :- 25 வயது நிரம்பிய இளம் தொழில் அதிபர் விரேந்தர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தன்னிடம் இருந்த 12 லட்சம் ரூபாயை மாற்ற வழி இல்லாததால் , மனம் உடைந்து தற்கொலை செய்ததாக மனைவி கூறினார் . தகவல் :- இந்தியன் எக்ஸ்பிரஸ்.

2.       ஆந்திர மாநிலம் சித்தூர் :- 7௦ வயது நிரம்பிய இரத்தின பிள்ளை வங்கி வாசலில் அதிக நேரம் நின்றதால் களைப்படைந்து வங்கி மேலாளரை அணுகிய நேரத்தில் இறந்தார் . தகவல் : தி இந்து.

3.       ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டம் :- 56 வயது நிரம்பிய வங்கி மேலாளர் ராஜேஷ் குமார் , 3 நாட்கள் இரவு பகல் வேலை செய்ததால் வங்கியில் இறந்து போனார். தகவல் :- இந்துஸ்தான் டைம்ஸ்.

4.       உபி மாநிலம் , அசம்கார் :- 7௦ வயது நிரம்பிய அஹமது வங்கி வாசலில் வரிசையில் நிற்கும் போது இறந்தார் . தகவல் டைம்ஸ் ஒப் இந்தியா

5.       ராஜஸ்தான் மாநிலம் , சிகார் மாவட்டம் :- 62 வயது நிரம்பிய டீ விற்கும் ஜகதீஸ் பன்வர் , தனது மகளின் திருமணத்திற்கு பணம் எடுக்கமுடியாததால் மாரடைப்பில் மரித்தார் . தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

6.       மீரட் :- நான்கு நாட்களாக வரிசையில் நின்றும் பணம் கிடைக்காத நிலையில் , வங்கி முன் வரிசையில் நிற்கும் போது மரணமடைந்தார் முகமது. தகவல் : தி இந்து.

7.       மத்திய பிரதேசம் : 7௦ வயது முன்னாள் இராணுவ வீரரான பாபுலால் தன்னிடமிருந்த 12௦௦௦ ரூபாயை மாற்ற போகையில் வங்கிக்கு 1௦௦ மீட்டர் அருகில் மரித்தார்.  தகவல் : தி வீக்கென்ட் லீடர்

8.       ஜார்கண்ட் , பலமு :-  வங்கியின் வாசலில் நிற்க்கும் போது ராம் சந்திர பாஸ்வான் மரித்தார்.  தகவல் : இந்திய எக்ஸ்பிரஸ்.

9.       உபி மாநிலம் , பல்லியா :- பல மணி நேரம் செலவழித்த பின்பும் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் மாரடைப்பில் மரித்தார் சுரேஷ் சோனார். தகவல் : பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா.

10.   புனே :- 53 வயது வங்கி உதவியாளரான துக்காராம் அதிக கூட்டத்தை கையாண்டதால் , மாரடைப்பில் உயிரிழந்தார். தகவல் : இந்துஸ்தான் டைம்ஸ்

இறந்த 65 பேர்களில் ஒரு பத்து பேர் மாத்திரமே இவர்கள்.....என்ன தப்பு செய்தார்கள்....? கொள்ளை அடித்தார்களா...? கருப்பு பணத்தின் மீது படுத்து கிடந்தார்களா...? இல்லை கள்ளப் பணம் அடித்தார்களா....?

நாட்டுக்காக இப்படி சில காரியங்களை சகிக்க தான் வேண்டும் என்று யாராவது கூறினால் , உங்கள் வீடுகளில் இப்படி யாரையாவது விட்டு தருவீர்களா என்று சிந்திக்கவும்....


மௌன அஞ்சலிகள் மாத்திரம்......!