Thursday 9 May 2013

IPL போட்டிகள் - ஆச்சரியம் கலந்த நிஜங்கள்



சென்ற மாதம் ஆரம்பித்து இன்னும் முடியாமல் அநேகம் பேருடைய தூக்கத்தை தொலைத்து கொண்டு இருக்கும் IPL  கிரிக்கெட் போட்டிகளை குறித்து நாம் அறியாமல் இருக்கவே முடியாது .   இந்த போட்டிகளில் அநேகம் ஆச்சரியங்கள் கலந்துள்ளதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது .  அவைகளை நாம் ஆராய்ந்து பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சி கூட வரலாம் .



  • 5 நாட்கள் கிரிக்கெட் விளையாடி விட்டாலே , ஓய்வு தேவைப்படுகிறது என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் நமது வீரர்கள் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் வெவ்வேறு இடங்களுக்கு சென்று சளைக்காமல் விளையாடுவது எனது முதல் ஆச்சரியம்.
  • கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கபோவதாக சொல்லி ICL ( Indian Cricket League ) போட்டிகளை தொடங்கினார் திரு கபில்தேவ் .  பெரிய துரோகம் செய்துவிட்டது போல அவரை புறந்தள்ளிய பிசிசிஐ , ICL போட்டிகளுக்கு மாற்றாக IPL தொடங்கியது மாத்திரமல்ல , திரு கபில்தேவ் உடனான அனைத்து உறவுகளையும் முறித்தது .  ஆனால் அப்படிப்பட்ட கபில்தேவ் இந்த IPL போட்டிகளில் "ஜும்சிக்கு " என்று நடனம் ஆடுவது எனது பெரிய ஆச்சரியம்  .
  • தனது நிறுவனத்தில் ( Kingfisher ) வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட தரமுடியாத பரம ஏழை திரு விஜய் மல்லையா அவர்கள் பல கோடிகளை  ( 111.6 மில்லியன் USD, அதாவது கிட்டத்தட்ட 558 கோடி ) கொட்டி ராயல் challngers என்ற அணியை வாங்கி இருப்பது எனது வியப்பின் அடுத்த பக்கம்  .
  • பல ஆயிரம் கோடி பணத்தை IPL மூலமாக சம்பாதிக்கும் பிசிசிஐ , இன்னும் அரசுக்கு செலுத்தவேண்டிய வரிப்பணம் சில கோடிகளை செலுத்த தாமதிப்பது ஒரு ஆச்சரியம் தானே 
  • நாள் முழுவதும் ரத்த வியர்வை சிந்தி உழைத்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி பிள்ளைகளிடம் அன்பாக சில வார்த்தைகளை பேசுவதை கூட மறந்துவிட்டு IPL காட்சிகளில் மூழ்கி கிடக்கும் நண்பர்கள் என் வியப்பின் உச்சகட்டம் .
நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிரானவன் அல்ல .  ஆனால் விளையாட்டு என்ற போர்வையில் ஒரு வியாபாரம் எழும்பி இருப்பதை தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை 

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி