Monday 12 December 2011

அரசியலே ... உன் பெயர் தான் ரெட்டை வேடமோ ...?


முல்லை பெரியார் என்ற பெயர் தான் இப்பொழுது தமிழகத்தை கலக்கி கொண்டு இருக்கிறது .   நமது ஊர் அரசியல் அண்ணாச்சிகளும் வேட்டியை மடித்து கட்டி கொண்டு கேரள அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் .  அனைத்து நாளேடுகளிலும் வெளிவரும் பிரபல அரசியல் தலைவர்களின் பேட்டிகளை படித்த போது தான் , இந்த கட்டுரையை வெகு நாள் கழித்து எழுத வேண்டும் என்று உந்தப்பட்டேன் .



 1887   ஆம் ஆண்டு  கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணை கேரள பிரதேச பகுதியில் கட்டப்படிருந்தாலும்  , அந்த அணையின் மூலம் பயன் பெறுவது தமிழ்நாடு என்பது தான் இந்த பிரச்சனையின் மூலக்காரணம்.  இந்த அணை பலவீனமடைந்து விட்டது என்று சொல்லி கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்வதும்  ,  அந்த அணை பலமானது என்று தான் தமிழக அரசியல்வாதிகள்  கூறுவதும் இந்த பிரச்சனையை அதிகரித்து உள்ளது.   



திரு . வைகோ அவர்கள் இந்த பிரச்னையை குறித்து சங்கரன்கோவில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் போது  " பூகம்பமே வந்தாலும் முல்லை பெரியாறு அணை உடையாது " என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த அணையின் பாதுகாப்பு நிபுணர் குழுவால் உறுதிபடுத்தப் பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்  ( நன்றி :  தினகரன்  , பக்கம் 15  , தேதி  12 - 12 - 2011 )
திரு தா . பாண்டியன்   , சிவகிரியில் நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில் , " 116  ஆண்டுகளே ஆன வலுவான நிலையில் உள்ளது அணை " என்று கூறியுள்ளார் , ( நன்றி :  தினகரன்  , பக்கம் 3  , தேதி  12 - 12 - 2011 )

எல்லாவற்றுக்கும் மேலாக திரு. திருமாவளவன் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் " அணை பாதுகாப்பு அற்றது என்று வதந்தியை பரப்பும் கேரள அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் .


இது எல்லாம் நல்ல விடயங்கள் தானே என்று நினைக்க தான் தோன்றுகிறது .   ஆனால் இந்த தலைவர்களை பார்த்து நான் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது .

முதலாவது .... திரு . வைகோ அவர்களே  ,  பூகம்ப பகுதி 3 ல் வரும் முல்லை பெரியார் அணை 116  ஆண்டுகள் ஆகியும் உடையாது என கூறுகிறீர்களே  ,  ஆனால் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம்ப பகுதி 2 ல் வந்தாலும் பூகம்பத்தால் பாதிக்கப்படும் என்று போராடினீர்கள் அல்லவா ...... அதன் அர்த்தம் என்ன ....?
திரு . திருமா ,  வதந்தியை பரப்பும் கேரள அரசை தண்டிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் நீங்கள்  ,  116  ஆண்டுகள் ஆன அணையின் பாதுகாப்பு நிபுணர் குழுவால் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறும் நீங்கள் ,  " கூடங்குளம் பாதுகாப்பானது என்று பெரும் அறிவியல்லாளர் திரு . அப்துல் கலாம் சொன்ன கருத்தை ஏற்க்கவில்லை .     வதந்திக்கு விரோதமாக போராடும் நீங்கள் ஏன்  கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக வதந்திகளை பரப்பும் திரு . உதயகுமார் அவர்களோடு கை கோர்த்தீர்கள் ..?

அப்பாவி மக்களை உங்கள் அரசியலுக்கும்  , அதி புத்திசாலிதனத்திற்கும் பலியாக்காதீர் என்பதே இந்த இந்தியனின் கோரிக்கை

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி