Tuesday 1 August 2017

பொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..? ஒரு அலசல் :

பொது விநியோகம் அல்லது நியாயவிலைக்கடைகள் என்று அழைக்கப்படுகிற ரேஷன் கடைகள் 1947 ம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு உருவாக்கப்பட்டது. அதன் மிக முக்கியமான நோக்கம் அனைவருக்கும் உணவு என்பது உறுதி செய்யப்படவேண்டும் என்பதே...!


இந்த நியாயவிலைக்கடைகளில் கிடைக்கும் பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதன் காரணம் அரசு அந்த விலையில் ஒரு சிறு பகுதியை மானியமாக கொடுப்பதே...! இந்த மானியத்தை குறைக்க அரசு செய்துள்ள முடிவு தான் இந்த மானியம் நேரடியாக வங்கிகளில் செலுத்தப்படும் என்பது. LPG வாங்கும்போது எப்படி மானியம் வங்கிகளில் செலுத்தப்பட்டதோ.. அப்படியே இந்த மானியமும் செலுத்தப்படும் என்று அரசு சொல்லுகிறது...


அரசின் இந்த கொள்கை வெளிப்புறமாக பார்ப்பதற்கு முன்னேற்றமாக தெரிந்தாலும் , இதனது விளைவுகள் நாட்டின் அடிப்படை மனிதனை அசைத்துவிடும் என்பது தான் உண்மை.! எப்படி என்று விளக்கமாக பார்ப்போம்.


PDS என்று சொல்லப்படகூடிய போது விநியோக திட்டத்தின்படி மத்திய அரசு விநியோகத்திற்கு தேவையான பொருட்களை அதாவது அரிசி , சீனி , கோதுமை மற்றும் மண்னென்னை முதலானவைகளை மாநில அரசுக்கு கொடுக்கவேண்டும். மாநில அரசோ அந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய தேவையான கடைகளை உருவாக்கவேண்டும். இந்த பணிக்கென்று தேவையான அளவில் உணவுப்பொருட்கள் வாங்கவும் அதை கையிருப்பில் பத்திரமாக வைக்கவும் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் FCI என்று சொல்லப்படக்கூடிய "மத்திய உணவுக் கழகம்"

இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களை இந்த மத்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்து வந்தது. எவ்வளவு பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் , அதை நியாயமான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கி , அதை தனது பண்டகசாலைகளில் பாதுகாத்து வந்தது. அந்த நியாயமான விலையை அரசே நியமித்து வந்தது. எனவே விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையும் அதே நேரத்தில் பசியால் வாடும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவும் கிடைத்துவந்தது....


சரி. இப்போதைய சூழலில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். பொது விநியோகத்திட்டம் ரத்து செய்யப்பட்டால் மத்திய உணவுக்கழகத்திற்கு என்ன வேலை இருக்கிறது? மத்திய உணவுக்கழகம் இல்லாவிடில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை யார் வாங்குவார்கள்? விளைவித்த பொருளை விற்காவிடில் விவசாயிகள் எங்கே போவார்கள்...?


நிச்சயம் பணக்கார நிறுவனங்கள் அந்த பணியை செய்ய ஆரம்பிக்கும். விளைவு ...! விவசாயிகளிடம் இருந்து அடிமட்ட விலையில் வாங்கி , சந்தையில் பெரும் லாபத்தில் விற்பார்கள்..! அரசு மானியம் நேரடியாக வங்கியில் தருகிறது என்று நாமும் அந்த பொருட்களை கடையில் வாங்குவோம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த மானியம் நிறுத்தப்படும். என்ன நடக்கும்..?

1.  சரியான விலை கிடைக்காததால் விவசாயத்தை கைவிடும் நிலை விவசாயிகளுக்கு வரும்...
2. விவசாயப் பொருட்கள் குறைந்தால் , விலை அதிகரிக்கும். வறுமை தலைவிரித்தாடும்...
3. தனியார் நிறுவனங்கள் செல்வதில் கொழிக்கும்..


அரசு லாபம் சம்பாதிக்க அல்ல...! குடிமக்களின் நன்மைக்காகவே இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தால் நாட்டின் முதுகெலும்பாகிய விவசாயத்தை காப்பாற்றலாம். இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரம் சீரழிவதை தடுக்க யாராலும் முடியாது.

Tuesday 14 February 2017

காணவில்லை - கண்டுபிடித்தால் வெகுமதி ....

நவம்பர் 28 , 2016  முதல் தேடப்பட்ட கருப்புப்பணம் இன்னும் காணவில்லை. தமிழ்நாட்டு அரசியல் என்னும் சாக்கடையில் காணாமல் போயிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அடையாங்கள் : -
காந்தி என்ற தாத்தா அழகாக சிரிப்பார்....
பணம் முழுவதும் கருப்புகலராக இருக்கும் என்று நம்பப்படுகிறது....


கண்டவர்கள் தகவல் தெரிவிக்கும்படி  கருப்புபணத்தை வலைவீசி பிடிக்கும் சங்கம் கேட்டுக்கொள்ளுகிறது.....

Saturday 14 January 2017

பாஜக வின் தேசபக்தி நாடகம் - சில படங்கள் மாத்திரம்.....

தேசிய கொடியை மதிக்கவேண்டும்....மாண்புமிகு பிரதமர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியபோது .....

( நன்றி ; முகநூல் )

எல்லையில் இராணுவ வீரர்கள் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படக்கூடாது..... இராணுவ வீரர்களை போல பாஜக கஷ்டபட்ட போது.....



தான் உடுத்தி வந்த மேல் நாட்டு உடைகளை களைந்து விட்டு கைத்தறி மூலம் செய்த கோவணத்தை கட்டி வந்த மகாத்மா காந்தியின் அடிசுவடிகளை மாண்புமிகு பிரதமர் பின்பற்றிய போது.....





மக்களை ஏமாளிகளாகவும் , கோமாளிகளாகவும் மாற்றும் பாஜக ஆட்சியை தூக்கி எறிய மக்களுக்கு எவ்வளவு நாள் ஆகும்.....?

Saturday 24 December 2016

நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்.......!?

காங்கிரஸ் பொது செயலாளர் திரு. ராகுல் காந்தி,  பிரதமர் திரு. மோடி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றசாட்டுகளை ஆதாரங்களுடன் கூறியதை நாம் அறிந்து இருக்கிறோம்.  அந்த குற்றசாட்டுகளுக்கு இன்று வரை பதில் தரப்படவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் சொன்ன வார்த்தை தான் " நமது பிரதமர் கங்கையை போல தூய்மையானவர்..."

உண்மையிலே கங்கா நதி மிகவும் தூய்மையானதா.....? என்றால் அது மிக பெரும் ஒரு வேதனையை தான் கொடுக்கிறது...

இமையமலை சாரலில் பனிக்கட்டிகள் உருகி , தண்ணீர் ஓடிவரும் போது , வெள்ளி கோடுகள் இழைத்தது போல தூய்மையை கண்டு மெய் சிலிர்த்து போய் நின்று இருக்கிறேன்...பெரும்பாலும் எல்லா நதிகளும் உற்பத்தியாகி வருகிற இடத்தில் சுத்தமாக இருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம்.....

ஆனால் அதே நதி இந்திய திரு கண்டத்தில் ஓடி வருகிற அவலம் இன்று கொடூரமானது.  மிகப் பெரிய அசுத்தமான நதிகளில் ஓன்று இந்த கங்கை நதியாக இருப்பதை கவனிக்கும் போது , நெஞ்சம் வலிக்கிறது.... மனித கழிவுகள் , மனித உடல்கள் , மற்றும் குப்பைகள் எல்லாம் சேர்ந்து இந்த கங்கையை அசுத்தமாக மாற்றி விட்டது...



இந்த அசுத்த கங்கையை சுத்தமாக்க பல முயற்சிகள் பல காலகட்டங்களில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகிறது.  ஆனாலும் இன்னும் சுத்தமானது போல தெரியவில்லை....

ஜனவரி 14 , 1986 ம் ஆண்டில் முன்னாள் பாரத பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி , இந்த கங்கையை சுத்திகரிக்கும் திட்டத்தை கையில் எடுத்தார். எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று இல்லாமல் , நீண்ட நெடிய தொலைநோக்கு பார்வையுடன் கங்கையில் கலக்கும் கழிவுகளை ( வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் ) அகற்ற பல புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார்.  Ganga Action Plan என்ற பெயரில் பல காரியங்கள் நிறைவேற்றப்பட்டது.  

1985 ம் வருடம் முதல் 2௦௦௦ வருடம் வரை கிட்டத்தட்ட 1௦ பில்லியன் ரூபாய்கள் இந்த தூய்மை திட்டத்திற்காக செலவிடப்பட்டது. 

2௦ பெப்ரவரி 2௦௦9 ம் ஆண்டில் இந்திய பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களால் National River Ganga Basin Authority (NRGBA )   என்ற அமைப்பை தொடங்கி இந்திய தேசியத்தின் நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது.  2௦11 ம் வருடத்தில் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் முயற்சியினால் கங்கையை சுத்தப்படுத்த உலக வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டாலர் அளவில் உதவி பெறும் ஒப்புதல் பெறப்பட்டது.

1௦ ஜூலை 2௦14 ம் வருடத்தில் கங்கையை சுத்தபடுத்த நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி 2௦37 கோடியை தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.  அடுத்த 5 வருடங்களில் இன்னும் 2௦௦௦௦ கோடி கங்கையை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது....

இந்திய தேசியத்தின் நதியான கங்கை வெகு விரைவில் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.  ஆனால் இவ்வளவு அழுக்கு நிறைந்த கங்கையை பிரதமரோடு ஒப்பிட்டு மத்திய அமைச்சர் பேசியது மாத்திரம் எனக்கு விளங்கவில்லை......

Wednesday 21 December 2016

தவறான திட்டமிடல் - வங்கி பணியாளர்கள் போர்க்கொடி...- வலுக்கும் எதிர்ப்பு....

5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தபோதே , இது பயனில்லா அறிவிப்பு என்றும் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தப்படும் அறிவிப்பு என்றும் பல பதிவுகள் எழுதியுள்ளேன்..

சில நண்பர்களிடம் விவாதிக்கும் போது , டிசம்பர் 3௦ ம் தேதி எல்லாம் சரியாகிவிடும் என்று மாண்புமிகு பிரதமர் உறுதி அளித்துள்ளார் என்று மாறி மாறி சொன்னார்கள்.  இன்னும் 1௦ நாள் தான் இருக்கிறது,...ஆனால் நாடு மிக மோசமான நிலைக்கு போகிறதை தான் நாம் பார்க்கமுடிகிறது....

இந்த நிலையில் தான் வருகிற 28 மற்றும் 29 தேதிகளில் போராட்டம் செய்யபோவதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பும் , அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பும் தெரிவித்து உள்ளது... இந்த போராட்ட அறிவிப்புக்கு இவர்கள் கொடுக்கும் காரணம் மிக ஏற்புடையதே....


  • மக்களின் தேவைகளை சந்திக்கும் வகையில் , போதுமான அளவு பணம் ரிசர்வ் வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்படவேண்டும்.  போதுமான அளவு பணம் கையில் இருக்கிறது என்று நிதி அமைச்சர் கூறுகிறார்....போதுமான நிதி கையில் இருந்தால் , அதை வங்கிகளுக்கு கொடுப்பது தானே நியாயம்

  • ரிசர்வ் வங்கியால் போதுமான அளவு பணம் கொடுக்க முடியாவிட்டால் , வங்கியின் பண பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்படவேண்டும்.

  • அன்றாட வாழ்வின் போராட்டங்களுக்காக மணிக்கணக்கில் ஏன் நாள்க்கணக்கில் வரிசையில் நின்று பணம் கிடைக்காத போது , பொது மக்களுக்கு கோபம் வந்து வங்கி பணியாளர்களுக்கு பாதுகாப்பின்மை நிலவுகிறது. போதிய பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.

  • நவம்பர் 8 முதல் இந்நாள் வரை இரவு பகல் உழைத்த அதிக நேரத்திற்கு கூலி கொடுக்கவேண்டும்.

  • நாடு முழுவதும் அதிகப்படியான புதிய நோட்டுகள் பிடிபடுவதாக தகவல் வருவதை குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.
கடைசி கருத்து ரொம்ப யோசிக்கவேண்டி உள்ளது.....வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு இப்படி வெளிப்படையாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொல்லுவதால் , இந்த புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் உண்மையிலே வங்கி வந்து தான் செல்லுகிறதா...? இல்லை நேரடியாக ரிசர்வ் வங்கியில் இருந்தே செல்லுகிறதா....?

அடுத்த தேர்தலில் மக்கள் அளிக்கும் பதிலடியை பார்க்கும் வரை , நிதி அமைச்சரும் சரி  , பிரதம அமைச்சரும் சரி , நாட்டை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள் என்று தான் தெரிகிறது....டிசம்பர் 3௦ வரை பொறுப்போம்....

Friday 16 December 2016

முதல்வன் பட இன்டர்வியூவும் , நிஜத்தில் ஒரு முதல்வரின் இன்டர்வியூவும்.....என்ன ஒற்றுமை...!

தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிய படம் அர்ஜுன் நடித்த முதல்வன் படம்.  முதல்வருடன் நேரடி விவாதத்தில் அர்ஜுன் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல்வர் தண்ணீர் குடிப்பார்..... அப்படி உண்மையிலே ஒரு முதல்வர் நமது நாட்டில் தண்ணீர் குடித்தார்...பாருங்களேன்.....!


மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது CNN IBN நேரடி தொலைக்காட்சியில் கரன் தபார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய காட்சி.....




நம்ம தமிழ்நாட்டு காரங்க படம் எடுக்கிற நிறைய விடயங்கள் இந்த காலத்தில் நடக்கிறது ஒரு ஆச்சரியம் தான் போங்க...!

Tuesday 13 December 2016

தமிழக அரசியல் குழப்பம் - பாஜக வின் பங்கு - ஒரு அலசல்....

மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் காலமான பிறகு தமிழக மக்கள் கிரகிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசியல் குழப்பங்கள் அதிகரித்து உள்ளது.... அதிமுக என்ற கட்சியின் அமைச்சர்களும் , MLAக்களுமே செய்வதறியாமல் பேசி வருகிறார்கள். ஆனால் நடக்கிற சம்பவங்களை பார்க்கும் போது , இவையெல்லாம் ஒரு நீண்ட நாள் திட்டமிடல் போல தோன்றுகிறது.

பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி நல்ல உறவு இருந்தது என்று தான் நாம் சொல்லமுடியும்.  "எங்கள் தனிப்பட்ட உறவு மிகச் சிறந்த முறையில் இருக்கிறது " என்று பிரதமர் அவர்களே பத்திரிகையாளர்களிடம் சொல்லி உள்ளதை நாம் அறிவோம். தகவல் : http://www.thehindu.com/news/national/tamil-nadu/i-have-excellent-personal-relations-with-jayalalitha-modi/article5919668.ece.

2௦15 ம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதியில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் , போயஸ் கார்டன் சென்று அம்மாவை சந்தித்து பேசியதையும் நாம் அறிந்திருக்கிறோம்.


செப்டம்பர் 22 , 2௦16 அன்று மாண்புமிகு அம்மா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிற்பாடு பாரத பிரதமர் அம்மா அவர்களை அக்டோபர் 16 வரை பார்க்க வரவில்லை.  ராகுல் காந்தி முதலிய தேசிய தலைவர்கள் அப்போல்லோ வந்து சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது , பிரதமர் சீக்கிரம் வந்து பார்ப்பார் என்று அறிவித்தார். மாத்திரமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து தலைவர்களிலும் அம்மா மீது நட்பும் பாசமும் வைத்திருப்பது நமது பிரதமர் அவர்கள் தான் என்றார்.  காணொளி கீழே இணைத்துள்ளேன்.


அப்படி இருக்கும் போது மாண்புமிகு அம்மா அவர்களை அவர்கள் இறக்கும் நேரம் வரை அப்போல்லோ வந்து பிரதமர் பார்க்காதது ஏன்...? என்பது ஒரு அசைக்கமுடியாத கேள்வி.

அக்டோபர் மாதத்தில் தமிழக தலைவர்கள் / மக்கள் எல்லாரும் அம்மாவின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது கூட மத்திய அரசின் கவனம் இந்த விசயத்தில் செலுத்தப்படாதது எப்படி என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு மாநில முதல்வர் காலமானால் , மிஞ்சி போனால் ஒரு இரண்டு நாளுக்குள்ளாக ஒரு இடைகால முதல்வரை நியமிப்பார்கள். ஆனால் அம்மா இறந்த அதே இரவே ஒரு அமைச்சரவை பதவி ஏற்றது எனக்கு தெரிந்து எந்த வரலாற்றிலும் இடம் பெறாத ஒரு விடயம்....

மாண்புமிகு அம்மா தமிழக மக்களுக்காக வைத்து போன கோடிக்கணக்கான சொத்துகள் ( மக்களால் நான் ...மக்களுக்காக நான் என்றதால் நான் இப்படி எழுதுகிறேன் ) நிமிடத்தில் கைமாற வேண்டுமெனில் ஒரு நாளைக்குள் நடக்கிற விடயமா....?

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சில திரை மறைவு வேலைகள் நடந்திருக்கும் என்று சந்தேகப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் முதல்வராக மாண்புமிகு ஒபிஎஸ் அவர்கள் இரண்டு முறை இருந்தாலும் , அம்மா அவர்களின் அரசியல் வாரிசாக அவர்கள் நியமிக்கப்படவில்லை. மாத்திரமல்ல சமீப காலங்களில் சில முக்கியமான பொறுப்புகளில் இருந்து திரு. ஒபிஎஸ் விளக்கி வைக்கப்பட்டு இருந்தார் என்பதை தமிழ்நாடே அறியும்....இப்படி இருக்க திரு. ஒபிஎஸ் அவர்களே முதல்வராக தெரிவு செய்யப்பட்டது அநேகரின் புருவத்தை உயர்த்தியது.

ஒருவேளை இந்த பதவி ஏற்கும் நிகழ்வு அம்மா மறைந்து சில வாரங்கள் கடந்து நடந்திருந்தால் , தமிழகத்தின் ஆட்சியே மாறி இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒபிஎஸ் யின் தலைமையை விரும்பாத MLAகள் திமுக வுடன் சேர்ந்து விட கூட வாய்ப்புண்டு. ஆனால் இவை அனைத்தையும் முறியடிக்க ஒரே வழி இரவே பதவி ஏற்பது......இது யாருடைய திட்டமாக இருக்கும் என்பது நமக்கு புரியாதது அல்ல...!

ஒபிஎஸ் ஒரு திறமையான முதல்வரா என்றால் , நான் சொல்லுவதை விட அவர் அவையில் பேசியதை கீழே கொடுத்திருக்கிறேன் , நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் 



இப்படிப்பட்ட முதல்வரை தமிழகத்தில் தேர்வு செய்ய காரணங்கள் என்ன என்றெல்லாம் நாம் விவாதிக்க இறங்கினால் , பல காரியங்களை கண்டு கொள்ளலாம்.

·         காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசை கண்டிப்பாக நிர்பந்தம் செய்ய தற்கால தமிழக அரசால் முடியாது..
·         மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்காத மத்திய அரசை கண்டிப்பாக தற்கால அரசு கண்டிக்காது..
·         GST போன்ற மசோதாக்களை நிறைவேற்றுவதில் இதுவரை சுணக்கம் காட்டி வந்த தமிழக அரசு , சீக்கிரம் அதை நிறைவேற்றும்.

மொத்தத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசிடம் இருக்கும். அம்மாவின் இறுதி சடங்கில் ஐயா என்னை கைவிட்டுறாதீங்க என்ற வகையில் திரு. ஒபிஎஸ் கதறுவதும் , நான் இருக்கேன் என்ற விதத்தில் பிரதமர் அவரை கட்டி அணைத்ததும் , தமிழக முதல்வர் தேர்வில் பாஜக இருக்கிறது என்று நம்பதான் தோன்றுகிறது.


தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

அதிமுக வை சேர்ந்த 5௦ MP கள் ( மக்களவை & மாநிலங்களவை ) டெல்லியில் இருப்பதால் , அவர்களை டெல்லியிலே தக்கவைக்க அதிமுக மத்திய அமைச்சரவையில் சேர்க்கபட்டால் ஆச்சரியம் இல்லை.

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சினிமா நடிகர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ( இது தமிழனின் விதி ) , கௌதமி மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து வந்ததும் தமிழக அரசியலில் பாஜக வின் காய் நகர்த்துதலில் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

ரஜினி போன்ற நடிகர்களை தங்களுக்கு  புகழாரம் சூட்டுவதற்கும் பாஜக அவரை பயன்படுத்தி கொள்ளும். இனி வரும் காலங்களில் ரஜினியின் புகழுரையை நாம் அடிக்கடி கேட்கலாம்.

இதெல்லாம் எதற்க்காக என்று நமக்கு கேட்க தோன்றலாம். ஒன்றே ஓன்று தான் இருக்கமுடியும்.  இந்த 5 வருட காலத்தில் பலவீனமான அதிமுக ஆட்சியை பயன்படுத்தி பாஜக வை தமிழகத்தில் வளர்க்கலாம் என்பது தான் பிரதானமான திட்டமாய் இருக்கும்.  அதற்காக அவ்வப்போது கருப்பு பண ஒழிப்பு போன்ற மாயையான திட்டங்கள் வந்தால் வியப்பில்லை.

தமிழகத்தின் பிரதான கட்சி திமுக சும்மா இருக்குமா என்று கேட்டால் சும்மா இருக்காது தான்.  ஆனால் அதை அடக்கி வைப்பதற்கு சில வழக்குகள் தொடரப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. கலாநிதி மற்றும் தயாநிதி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை நாம் கவனிக்காமல் விட முடியாது.

மொத்தத்தில் தமிழகம் விழித்தால் நல்லது அல்லது வெகு சீக்கிரத்தில் மாயையில் மாளும் நாள் இல்லை என்பது தான் இந்த இந்தியனின் கருத்து.